;
Athirady Tamil News

ஆசிய நாடொன்றில் கோடீஸ்வர பிச்சைக்காரர் – ஒருநாள் வருமானம் இவ்வளவா?

0

பாகிஸ்தான் (pakistan) பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

பணக்கார பிச்சைக்காரரான ஷவுகத் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவருக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு கோடி அளவிற்கு காப்பீடு
இவர் தனது குழந்தைகளை நாட்டின் மிகப்பெரிய பாடசாலையில் படிக்க வைத்து வருகிறார். அவர்களுக்கு ரூ.1 கோடி அளவிற்கு காப்பீடும் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2021-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வங்கி கணக்கில் ரூ.17 இலட்சம் பணம் இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் வரி வசூலிக்கும் நிறுவனமான பெடரல் போர்டு ஆப் ரிவென்யூ கூறியுள்ளது.

அத்துடன் பிச்சையெடுப்பதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் ரூ.1000 இவர் சம்பாதித்து விடுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இவர் தனிப்பட்ட ரீதியாக தனது நிதி நிலைமை குறித்து அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.