;
Athirady Tamil News

மின்சாரம் தாக்கி 17வயது மாணவன் பரிதாப மரணம்

0

அனுராதபுரம் (Anuradhapura) – கல்கிரியாகம திக்வண்ணகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்றைய (25) தினம் தனது வீட்டுத் தோட்டத்திற்கு வரும் குரங்குகளை விரட்டுவதற்காக தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த வானொலிப் பெட்டியில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக அடியாகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நோயாளர் காவு வண்டி
ஆபத்தான நிலையில் இருந்த மாணவனை தம்புள்ளை (Dambulla) வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்த போதிலும், அவ்வேளையில் நோயாளர் காவு வண்டி இல்லாததாலும், மற்றுமொரு வண்டி கிடைக்காததாலும், அதே வைத்தியசாலையில் சிகிச்சை வழங்க வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பலமணிநேர சிகிச்சையின் பின்னர் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.