;
Athirady Tamil News

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன

0

சம்பள முரண்பாடுகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று(26) முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக குறைந்தது 10,026 அரச பாடசாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin )தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைகள், பரீட்சை வினாத்தாள் திருத்த கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை
ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் 30 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இன்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர் வேலைநிறுத்தத்தால் பள்ளிக்கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டிய ஜோசப் ஸ்டாலின், அவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

கொழும்பில் எதிர்ப்பு பேரணி
இதேவேளை, சம்பள முரண்பாடுகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பல ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களினால் கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு கோட்டை தொடரந்து நிலையத்திற்கு எதிரே ஓல்கொட் மாவத்தை மற்றும் லோட்டஸ் வீதிக்கு அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.