;
Athirady Tamil News

அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் (27) தொடர்கிறது

0

அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் (27) தொடர்கிறது என இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.

அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, தமக்கு கிடைக்கவேண்டியதை கேட்கும் அதிபர், ஆசிரியர்களின் ஜனநாயகரீதியான இன்றைய போராட்டத்தை நசுக்க, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி, அதிபர், ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடாத்திய ரணில்- ராஜபக்ஸ அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து நாளைய தினம் 27 ம் திகதியும் அதிபர், ஆசிரியர்களின் சகயீன விடுமுறைப் போராட்டம் தொடரவுள்ளது.

அதிபர்கள் ஆசிரியர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டிக்கும் விதமாக இன்று போல் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நாளைய தினமும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் ஆ.தீபன் திலீசன் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.