;
Athirady Tamil News

சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

0

அரபிக்கடலின் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் சரக்கு கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கப்பலில் இருந்த மாலுமிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏவுகணை கப்பலுக்கு மிக அருகே கடலில் விழுந்துள்ள நிலையில் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

டிரோன் தாக்குதல்
ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும், சரக்கு கப்பல்களை சிறைபிடிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், இஸ்ரேலின் துறைமுக நகரமான எலியட் நகரை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆனால், இஸ்ரேல் எல்லைக்குள் வந்த டிரோனை அந்நாட்டு படையினர் நடு வானிலேயே சுட்டு வீழ்த்தியதுடன். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.