;
Athirady Tamil News

ரயிலில் Upper Berth Seat கீழே விழுந்ததால் பயணிக்கு நேர்ந்த சோக நிகழ்வு

0

விரைவு ரயில் ஸ்லீப்பர் பெட்டியில் மேல் படுக்கை கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பயணி உயிரிழந்துள்ளார்.

பயணி உயிரிழப்பு
எர்ணாகுளம் – நிஸாமுதீன் விரைவு ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) என்பவர் மீது மேல் படுக்கை விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதாவது, கீழ் படுக்கையில் இருந்த அலிகான் மீது மேல் படுக்கை விழுந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், ரயில்வே நிர்வாகம் தரப்பில், நடு படுக்கை உடைந்து விழவில்லை என்றும், மற்றொரு பயணி சங்கிலி மாட்டாததால் நடு படுக்கை வேகமாக வந்து மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மோடி அரசின் கீழ் இப்படி தான் இருக்கிறது.

போதுமான ரயில்கள் அல்லது இருக்கைகள் இல்லை. நீங்கள் ரயிலில் ஏற நினைத்தால் இருக்கை இருக்காது. ரயிலில் உங்களுக்கு பாதுகாப்பு இருக்காது.

உங்களுக்கு இருக்கை இருந்தாலும் இருக்கை கீழே விழுந்து நீங்கள் கொல்லப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.