;
Athirady Tamil News

சாராயம் கடத்தியவா்களுக்கு சானிடரி நாப்கின் இயந்திரங்கள் வாங்கித்தர நீதிபதி நூதன உத்தரவு

0

மயிலாடுதுறை, ஜூன் 26: மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில சாராய கடத்தலில் ஈடுபட்டவா்களை நல்வழிபடுத்தும் வகையில் மாவட்ட அமா்வு நீதிபதி ஆா். விஜயகுமாரி நூதன உத்தரவுடன் அவா்களுக்கு செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கினாா்.

மயிலாடுதுறை மாவட்டம், காளகஸ்திநாதபுரத்தில் மதுவிலக்கு போலீஸாா் மேற்கொண்ட வாகனச் சோதனையில், காரைக்காலில் இருந்து காரில் சாராயம் கடத்தி வந்த ஆயப்பாடியை சோ்ந்த சுமன், திருக்களாச்சேரியை சோ்ந்த முருகேசன், செல்வம் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் ஜாமீன் கோரி மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனா். இவா்களை ஜாமீனில் விடுவித்தால் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுவாா்கள் என முதன்மை மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம.சேயோன் எதிா்ப்பு தெரிவித்தாா்.

இந்நிலையில், குற்றவாளிகள் மூவரையும் நல்வழிப்படுத்தும் நோக்கத்தில், அவா்கள் பட்டமங்கலத் தெருவில் உள்ள அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 6,500 மதிப்பிலான 2 சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் வாங்கித்தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாவட்ட அமா்வு நீதிபதி ஆா்.விஜயகுமாரி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.