;
Athirady Tamil News

இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை… மனமுடைந்துபோன இளவரசர் ஹரியின் அடுத்த திட்டம்

0

இளவரசி கேட் மிடில்டன் தனக்கு புற்றுநோய் பாதித்துள்ளதாக தெரிவிக்கும் வீடியோவைப் பார்த்து இளவரசர் ஹரி மனமுடைந்துபோனதாக கூறப்படும் நிலையில், தன் குடும்பத்தினர் விரும்பாவிட்டாலும் அவர்களை சந்திக்க ஹரி முடிவு செய்துள்ளதாக ராஜ குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை…
பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்கப் பெண்ணான மேகனை திருமணம் செய்ததைத் தொடர்ந்து ராஜ குடும்பத்தில் எழுந்த பிரச்சினைகளுக்குப் பிறகு, ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தைவிட்டும், பிரித்தானியாவை விட்டும் வெளியேறினார்கள்.

அதன் பின் அவர்கள் ராஜ குடும்பத்தினரை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டுவந்ததால், ராஜ குடும்ப மூத்த உறுப்பினர்கள் அவர்களுடனான உறவை கிட்டத்தட்ட துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.

உடன் பிறவா சகோதரிபோல பழகிய இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் என தெரியவந்தபிறகும், ஹரி இளவரசி கேட்டை சந்திக்கவில்லை. தன் தந்தையின் பிறந்தநாள் விழா உட்பட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஹரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. குடும்பத்திலிருந்தே தள்ளிவைக்கப்பட்டது போன்ற ஒரு நிலைக்கு ஆளாகியுள்ளார் ஹரி.

இளவரசர் ஹரியின் அடுத்த திட்டம்
ஆகவே, தன் குடும்பத்தினருடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், இந்த ஆண்டின் இறுதிவாக்கில் பிரித்தானியா திரும்ப ஹரி முடிவு செய்துள்ளதாக ராஜ குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹரி இன்னமும் இளவரசர்தான், அவர் இப்போதும் ராஜ குடும்பத்தில் ஒருவர்தான் என்று கூறும் அந்த நபர், இப்படி நடக்கும் என ஹரி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, ஆகவே, அவர் பிரித்தானியாவுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளார்.

அவரது குடும்பத்தினர் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, கட்டாயத்தின்பேரிலாவது தன் குடும்பத்தினர் தன்னை சந்திக்கவைக்க ஹரி திட்டமிட்டுள்ளார் என்கிறார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.