;
Athirady Tamil News

பாகிஸ்தானில் 4 நாட்களில் 450 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

0

பாகிஸ்தானின் கராச்சியில் கடும் வெப்பத்தால் கடந்த நான்கு நாட்களில், 450 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கராச்சியில், கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான வெப்பம் நிலவி வருகின்றது. இந்நிலையில் அங்கு 41 டிகிரி செல்சியஸைத் தாண்டி அங்கு வெப்ப அலை வீசி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 427 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

வெப்ப அலையால் உயிரிழந்தவர்களுள் பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.