;
Athirady Tamil News

அரச பாடசாலைகள் வழமை போன்று இன்று இயக்குமா? கல்வி அமைச்சு அறிவிப்பு

0

இலங்கையில் இன்று (28-06-2024) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு நேற்றையதினம் (27-06-2024) கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் நேற்று இரண்டாவது நாளாக சுகயீனமுற்றோர் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இன்று (28) முதல் வழமையான கடமைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.