;
Athirady Tamil News

கடற்படை மாலுமியின் இறுதி நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர்

0

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்படை மாலுமியின் இறுதி கிரியைகளில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை யாழ்.மாவட்டத்தில் இருந்து கடற்தொழிலாளர்களின் பிரதிநிதிககளும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உயிரிழந்த கடற்படை மாலுமிக்கு அஞ்சலி செலுத்தினர்.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய படகொன்றினை வழிமறித்து , படகில் இருந்தவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை கடற்படை மாலுமி உயிரிழந்தார்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும், கடற்படை சிறப்பு மாலுமியான குருநாகல் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ரத்நாயக்க என்பவரே உயிரிழந்திருந்தார்.

சம்பவத்தினை அடுத்து , படகில் இருந்த 10 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு புதன்கிழமை காங்கேசன்துறை பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.