;
Athirady Tamil News

மயங்கிச்சரிந்து ஒருவர் உயிரிழப்பு

0

வேலைத் தளத்தில் மயங்கிச் சரிந்தவர் உயிரிழந்துள்ளார்.

இளவாலை – பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மனுவல் அன்ரன் மரியதாஸ் (வயது – 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுண்ணாம்புக்கற்கள் அகழும் இடத்தில் பணிபுரியும் அவர், பணிக்காகச் சென்றபோது காலை 9.30 மணியளவில் மயங்கிச் சரிந்துள்ளார். அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.