;
Athirady Tamil News

லட்சக்கணக்கான இந்திய காகங்களை கொன்று குவிக்க முடிவெடுத்துள்ள நாடு!

0

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்திய காகங்களுக்கு விஷம் கொடுக்க கென்ய அரசு திட்டமிட்டுள்ளது.

கென்ய அரச, அந்நாட்டில் ஆக்கிரமித்துள்ள இந்திய காகங்களுக்கு எதிரான போரைத் தொடங்கியுள்ளது, அவற்றை ஒழிக்க ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.

கென்யா இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான காகங்களை அழிக்க இலக்கு வைத்துள்ளது. காகங்கள் மீது கென்யா இவ்வளவு கோபம் வர காரணம் என்ன?

புத்திசாலித்தனமான பறவைகள் என்று அழைக்கப்படும் காகங்களுக்கு இந்தியாவில் இந்து புராணங்களில் முக்கிய இடம் உண்டு.

ஆனால், இந்த காகங்களுக்கு விஷம் கொடுத்து கொல்ல கென்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளதற்குக் காரணம் காகங்களின் தொல்லை அதிகம்.

பூங்காக்கள், வயல்வெளிகள் போன்ற திறந்தவெளியில் பிறந்தநாள் கேக் வெட்டக்கூடாது என்ற அளவுக்கு இந்திய வம்சாவளி காகங்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

காக்கைகள் மீது நூற்றுக்கணக்கான புகார்களை அங்குள்ள மக்கள் குவித்து வருகின்றனர். காகங்கள் அங்குள்ள மக்களை தாக்கி அங்குள்ள கேக்கை சேதப்படுத்துகின்றன.

தலையை கொத்துவது முதல் சுற்றுலாப் பயணிகளின் தட்டுகளில் இருந்து உணவைத் திருடுவது, பூர்வீகப் பறவைகளை அவற்றின் வாழ்விடங்களிலிருந்து விரட்டுவது மற்றும் பயிர்களை சேதப்படுத்துவது என இந்திய காகங்கள் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளன.

பல தசாப்தங்களாக அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முயன்ற கென்ய அரசாங்கம் காகங்களுக்கு எதிராக ஒரு பாரிய போரைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கென்யா வனவிலங்கு சேவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அதில், வீட்டுக் காகங்கள் அல்லது இந்திய காகங்கள் என்று அழைக்கப்படும் காகங்கள் பல தசாப்தங்களாக பொதுமக்களை தொந்தரவு செய்யும் ஆக்கிரமிப்பு அன்னிய பறவைகள். இந்த பறவைகள் கென்ய கடற்கரை மற்றும் ஹோட்டல் தொழிலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, கென்யா வனவிலங்கு வாரியம் 2024 டிசம்பர் இறுதிக்குள் இந்த காகங்களை முற்றிலுமாக ஒழிக்க இலக்கு நிர்ணயித்து அதற்கான செயல் திட்டத்தை உருவாக்கி வருகிறது.

கென்யா வனவிலங்கு சேவை (KWS) பறவைகள் உள்ளூர் முன்னுரிமை சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இல்லை என்று கூறியது.

கென்யாவின் வனவிலங்குத் துறை, அவற்றின் அதிக எண்ணிக்கை மற்ற பறவைகளின் சந்ததிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறது.

கென்யாவின் கடலோரப் பகுதிகளில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், இந்த காகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சேதங்கள் மீதுகடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதையடுத்து, இந்த காகங்களின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.