;
Athirady Tamil News

தலையில் காயம்…கடற்கரையில் இறந்து கிடந்த பிரித்தானிய மாலுமி: கிரேக்க தீவில் சோகம்

0

கிரேக்க தீவான ஸ்பெட்ஸஸில்(Spetses) பிரித்தானிய மாலுமி உயிரிழந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானிய மாலுமி மரணம்
கிரேக்க தீவான ஸ்பெட்ஸஸில்(Spetses) அருகில் நாற்பது வயதுடைய பிரித்தானிய மாலுமி வெள்ளிக்கிழமை இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

உள்ளூர் படகுப் போட்டியில் பங்கேற்றதாகக் கூறப்படும் அந்த மனிதர், கிரேக்க கடலோரக் காவல் படையினர் தகவலின்படி, தலையின் இடது பக்கத்தில் காயங்களுடன் ஒரு விரிகுடா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தொடங்கிய விசாரணை
மரணக் காரணம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறது, என்றாலும் அதிகாரிகள் தலையில் ஏற்பட்ட காயத்தால் குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியா மாலுமி நீரில் மயக்கமடைந்து கிடப்பதை கண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்த பிரித்தானிய மாலுமியின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தின் போது தீவின் வருடாந்திர பாரம்பரிய படகுப் போட்டி நடந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.