;
Athirady Tamil News

உலகில் முதல் முறையாக கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிப்பு: எந்த நாடு தெரியுமா?

0

டென்மார்க்கில் பசு, பன்றி போன்ற கால்நடைகள் கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு வரி விதிப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக, டென்மார்க் அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதாவது காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், பசு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.//// இது உலகிலேயே முதல் முறையாக அமல்படுத்தப்படும் திட்டமாகும்.

2030ஆம் ஆண்டு முதல் இந்த வரி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்ட தகவலின்படி, 2020ஆம் ஆண்டில் இருந்து மீத்தேன் வாயு உமிழ்வு அதிகரித்து வருகிறது. தற்போது வெளியாகும் மொத்த மீத்தேன் வாயுவில் 32% கால்நடைகளால் உருவாகிறது.

டென்மார்க்கின் நீண்ட கால திட்டம்
பசுமை இல்ல வாயு உமிழ்வை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டென்மார்க் அரசு 1990ஆம் ஆண்டில் இருந்த அளவில் இருந்து 2030ஆம் ஆண்டுக்குள் 70% வரை குறைக்க திட்டமிட்டுள்ளது.

ஆய்வுகளின்படி, ஒரு பசு ஆண்டுக்கு 6.6 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வரி விவசாயிகளுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. அதே சமயம், சுற்றுச்சூழலை பாதுகாக்க இது ஒரு அவசியமான நடவடிக்கை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்கருதுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.