;
Athirady Tamil News

விமான நிலையத்தில் பயங்கர விபத்து; மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலி – ஷாக் சம்பவம்!

0

விமான நிலையத்தின் மேற்கூரை விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

மேற்கூரை விழுந்து..
தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த சூழலில், டெல்லி விமான நிலையத்தின் ஒன்றாவது முனையத்தில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

3 பேர் பலி
கனமழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் பலத்த சேதமடைந்தது. அங்கு உள்ளே சிக்கியிருந்தவர்களை தீயணைப்பு துறையினர் உடனே மீட்டனர்.அதில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.டெர்மினல் ஒன்றிலிருந்து புறப்படும் ஸ்பைஸ் ஜெட் , இன்டிகோ விமானங்கள் மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.