;
Athirady Tamil News

யாழில் கூரிய ஆயுதங்களுடன் கைதான மூவர்: மேலதிக விசாரணையில் காவல்துறையினர்

0

யாழ்ப்பாணம்(Jaffna) – கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(28.06.2024) இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கூடியிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவர் கைது
இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று(29) முற்படுத்த கோப்பாய் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.