;
Athirady Tamil News

கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலி!

0

காராஷ்டிரத்தின் ஜல்னா மாவட்டத்தில் சம்ருத்தி விரைவுச்சாலை என்றும் அழைக்கப்படும் மும்பை-நாக்பூர் விரைவுச்சாலையில் இரண்டு கார்கள் மோதியதில் 7 பேர் பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “காட்வாஞ்சி கிராமத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.

நாக்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற காரும், எதிர்திசையில் இருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பலியானவர்கள் மும்பை மற்றும் புல்தானா மாவட்டத்தில் உள்ள மலாட் பகுதியை சேர்ந்தவர்கள்.

இந்த விபத்தில் மோதிய கார், தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு சாலையின் இடதுபுறத்தில் வந்து விழுந்தது.

காயமடைந்த மூவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.