;
Athirady Tamil News

இலங்கையில் மில்லியனை கடந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

0

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இலங்கைக்கு வருகை வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதன் படி, இன்று (29) பிற்பகலில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகள் பதிவாகியுள்ளனர்.

இந்த நிலையில், 1,000,000 வது சுற்றுலாப் பயணியாக அயர்லாந்து பிரஜை போல் ரோய் என்ற சுற்றுலா பயணி பெயரிடப்பட்டுள்ளதுடன் அவருடன் பெட்ரீஷியா ரோய் என்ற பெண்ணும் வருகை தந்துள்ளார்.

வரவேற்பு
அவர்கள் இன்று மதியம் 12.40 மணியளவில் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.