;
Athirady Tamil News

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னரின் தங்கை: சமீபத்திய தகவல்

0

பிரித்தானிய மன்னரின் தங்கையான இளவரசி ஆன் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசி ஆன்

பிரித்தானிய மன்னர் சார்லசின் தங்கையான இளவரசி ஆன், ஞாயிற்றுக்கிழமையன்று தனது குதிரைகளில் ஒன்றால் தாக்கப்பட்டுள்ளார்.

தலையில் தாக்கப்பட்டதால், அவருக்கு concussion என்னும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த concussion என்பது மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும் மூளையில் ஏற்படும் லேசான காயமாகும்.

ஆகவே, ஞாபக மறதியாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி, அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய தகவல்
இந்நிலையில், நேற்று முன் தினம் , அதாவது, ஜூன் மாதம் 28ஆம் திகதி, வெள்ளிக்கிழமை காலை, இளவரசி ஆன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் Gatcombe Park என்னுமிடத்திலுள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

மன்னர் சார்லசும் இளவரசி கேட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 73 வயதிலும், ஏராளமான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு பரபரப்பாக இயங்கிவந்தார் இளவரசி ஆன் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.