;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் குளத்தில் மூழ்கிய 14 வயது சிறுவன் மாயம்

0

கிளிநொச்சி (Kilinochchi) – இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சிறுவன் அவரது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.

காணாமல்போயுள்ள சிறுவன்
திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்று வரும் முறிகண்டி – வசந்தநகர் பகுதியில் வசிக்கும் செல்வரத்தினம் ருஷாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இந்நிலையில், காணாமல்போயுள்ள சிறுவனை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.