;
Athirady Tamil News

யாழில் பெரும் சோகம்… சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த தமிழர்!

0

மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவத்தில் யாழைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை (29-06-2024) உயிரிழந்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் (ONUR) பணிப்பாளர் சபை பிரதிநிதியாக கந்தசாமி கருணாகரன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 25-06-2024ஆம் திகதி யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து திருத்த வேலை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்தின் மீது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சம்பவ இடத்திலையே மூவர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதில் ஒருவரே நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.