;
Athirady Tamil News

யாழில் பிரதான வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

0

யாழ்ப்பாணம் (Jaffna) நயினாதீவில் கப்பல் திருவிழா அன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வாள்வெட்டின் பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் தலைமையிலான மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலை
இதையடுத்து அவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.