;
Athirady Tamil News

பிரித்தானியாவில் XL புல்லி இன நாயை சுட்டுக் கொன்ற பொலிஸார்!

0

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் பொதுமக்களை தாக்கிய XL புல்லி இன நாயை காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது.

XL புல்லி இன நாயால் ஏற்பட்ட தொல்லை
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் XL புல்லி இன நாய் ஒன்று பொதுமக்களை தாக்கியதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து எக்லெஸ் என்ற இடத்தில் “கட்டுப்பாட்டை மீறி ஆக்ரோஷமாக இருக்கும்” நாய் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை அதிகாரிகள் கலவரமான சூழ்நிலையை கண்டனர்.

அப்போது சாலையில் ஓடிக்கொண்டிருந்த நாயை காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

இது தொடர்பாக வெளியான காட்சிகளில் நாயின் உரிமையாளர் கதறியபடி அதை சுட வேண்டாம் என கெஞ்சுவது கேட்க முடிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.