;
Athirady Tamil News

நயினாதீவு கப்பல் திருவிழாவில் வாள் வெட்டு – ஒரு வாரத்தின் பின் சந்தேகநபர் கைது

0

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கப்பல் திருவிழாவின் போது , இளைஞன் ஒருவரை வாளால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற கப்பல் திருவிழாவின் போது , இளைஞன் ஒருவர் மீது மற்றுமொரு இளைஞன் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு , சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , நயினாதீவு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் தாக்குதலாளி கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்து இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.