தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஈ.பி.டி.பி நிர்வாக செயலாளர் உயிரிழப்பு
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/07/Screenshot-2024-07-01-152102-577x430.jpg)
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்காயங்களுக்கு உள்ளான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச நிர்வாக செயலாளரான பவானி என அழைக்கப்படும் வடமராட்சி கிழக்கை சேர்ந்த சரவணபவானந்தன் சிவகுமார் என்பவரே சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி , தனது மீன் வாடியில் தூக்கத்தில் இருந்தவேளை திடீரென உடலில் தீப்பற்றிய நிலையில் , அலறியபடி வெளியே ஓடி வந்த வேளை அயலவர்கள் தீயினை அணைத்து , வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தூங்கிக்கொண்டிருந்த வேளை இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டினை வீசி விட்டு தப்பி சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் , மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.