வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் போராட்டம்
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/07/Screenshot-2024-07-01-155820-750x430.jpg)
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், பெற்றோர் என பலரும் கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.