;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் பதைபதைக்க வைத்த சம்பவம்; தெய்வாதீனமாக தப்பிய குழந்தை

0

கிளிநொச்சியில் வீடொன்று திடீரென தீப்பற்ரி எரிந்த நிலையில்தொட்டிலில் படுத்துறங்கிய குழந்தை கடவுள் அருளால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணகிநகர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம்
தாயார் மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியில் சென்று மீன் வெட்டிக் கொண்டிருந்தபொழுது வீடு தீ பிடித்துள்ளது.

இந்நிலையில் திடீரென வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்ததை அவதானித்த பெண் ஓடிச் சென்று தொட்டிலில் படுத்துறங்கிய குழந்தையை தூக்கிக் கொண்டார்.

அவரது கூக்குரலை கேட்டு ஓடிவந்த அயலவர்கள் மற்றும் உறவினர்களின் துணையுடன் வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் வீடு முற்றாக எரித்துள்ளது .

இதன் போது வீட்டில் இருந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம், தொலைபேசி, 2 மீன் பிடிவலைகள், உடைகள் மற்றும் வீட்டில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.