;
Athirady Tamil News

இரா.சம்பந்தனின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் இரங்கல்

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தன் நேற்றிரவு தனது 91 அவது வயதில் காலமானார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இரா.சம்பந்தனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தேசியத் தலைவராக, நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார்.

அவரது இழப்பிற்கு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேவேளை இரா.சம்பந்தன் மறைவிற்கு இலங்கை இந்திய அரசியல் பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.