;
Athirady Tamil News

நுவரெலியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டம்

0

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் தலவாக்கலை கல்கந்தவத்த தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை நேரத்தின் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (02) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பாடசாலைகளுக்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு
குறித்த பாடசாலையில் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைத்துள்ளனர்.

மேலும், அண்மையில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்தினரால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டமையை ஆர்பாட்டகாரார்கள் கண்டித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.