;
Athirady Tamil News

பிரான்ஸ் வலதுசாரிக் கட்சிக்கு பிரித்தானிய கட்சி ஆதரவு: இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் என்ன ஆவது?

0

பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் திரண்டு பேரணி நடத்தினர். வன்முறை வெடித்ததால், பொலிசார் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகிக்கும் நிலை ஏற்பட்டது.

பிரான்சிலேயே அக்கட்சிக்கு எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், பிரித்தானியாவில் தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்களில் ஒருவரான, லேபர் கட்சி வாக்காளர், பிரான்சில் வெற்றிபெற்ற கட்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் வெற்றி பெற்றுள்ள கட்சி
பிரான்சில் நடைபெற்ற முதல் சுற்று நாடாளுமன்றத் தேர்தலில், வலதுசாரிக் கட்சியான National Rally பெரும் எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுள்ளது.

National Rally கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட கட்சியாகும்.

அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் பல பிரிவினருக்கும் ஆபத்து என கருதும் மற்றொரு எதிர்க்கட்சி ஆதரவு மக்கள், National Rally கட்சி வெற்றி பெற்றதை எதிர்த்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டார்கள், பொலிசாருடன் கைகலப்பு, தீவைப்பு, கண்ணாடி ஜன்னல்கள் உடைப்பு என தலைநகரமே அல்லோலகல்லோலப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.