;
Athirady Tamil News

6 பெண்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த பேருந்து: அதிர்ச்சியூட்டும் CCTV காட்சி

0

உத்தரகாண்டில் நடந்த பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேருந்து விபத்து
உத்தரகண்டில் இன்று மாலை வேகமாக வந்த பஸ் 6 பெண்களை மோதி விபத்து ஏற்படுத்தியது.

CCTV காட்சிகளில், பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ ரிக்க்ஷாக்காக காத்திருந்த பெண்களை மோதி விபத்துக்குள்ளானது தெளிவாக தெரிந்தது.

துரதிருஷ்டவசமாக ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மூன்று பெண்களும் எதிர் திசையில் இருந்து வந்த ஸ்கூட்டர் ஓட்டுநரும் அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் தப்பி ஓடினர்.

விசாரணை
காயமடைந்த பெண்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பஸ்ஸில் புனித மேரி மேல்நிலைப் பள்ளியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தாலும், பள்ளி உடனான தொடர்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“மாலை 5 மணி அளவில் விபத்து குறித்த தகவல் கிடைத்தது, முழு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்று உத்தரகண்ட், உத்தம் சிங் நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மஞ்சுநாத டிசி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.