;
Athirady Tamil News

உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுமி பரிதாப உயிரிழப்பு

0

தன்சலுக்காக சமைக்கப்பட்ட பெரிய உணவு பாத்திரம் ஒன்றில் தவறி விழுந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி நேற்று (02) உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாணந்துறை பெக்கேகம பகுதியைச் சேர்ந்த ஷயனி மெதும்சா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொசன் சாப்பாட்டு தன்சல்

கடந்த 23 ஆம் திகதி பொசன் போயவை முன்னிட்டு பாணந்துறையில் சாப்பாட்டு தன்சல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது பெரிய உணவு பாத்திரம் ஒன்றிலேயே விழுந்த சிறுமி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், நிலைமை மோசமாக இருந்ததால் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.