;
Athirady Tamil News

காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது குண்டு வீசிய இஸ்ரேல் : 12 பேர் பலி

0

மத்திய காசாவின் (Gaza) டேர் அல் பலாஹ் (Deir al Balah) பகுதியில் இஸ்ரேல் (Israel) படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்த 12 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, வடக்கு காசாவின் ஷெஜையா (Shejaiya) மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் மற்றும் தெற்கு காசாவின் ரபா மற்றும் மத்திய காசா ஆகிய பகுதிகளில் இராணுவ நடவடிக்கை தொடர்வதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று (02) செய்தி வெளியிட்டிருந்தது.

ஒழிக்கும் நடவடிக்கை
இந்தநிலையில், காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் (Hamas) அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், இதில் ஹமாஸ் அமைப்பினருடன் அப்பாவி பலஸ்தீனர்களும் பலியாகி வருவதுடன் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமான இந்த யுத்தத்தில் இதுவரை காசாவில் 37,925 பேர் பலியாகியிருப்பதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.