;
Athirady Tamil News

தீவிரப்படுத்தப்படும் யுக்திய சுற்றிவளைப்பு : அம்பலாங்கொடையில் மூவர் கைது

0

அம்பலாங்கொட (Ambalangoda) பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை தவறான முறைக்குட்படுத்தியதாக தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்தாதொல பகுதியில் இன்று (04) காலை யுக்திய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுக்திய சுற்றிவளைப்பு
நாடளாவிய ரீதியில் காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதேவேளை, முல்லைத்தீவு (Mullaitivu) – புதுக்குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து யுக்திய சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பில் பல குற்றங்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.