;
Athirady Tamil News

லிந்துலை பகுதியில் லயன் குடியிருப்பில் தீ பரவல்

0

தலவாக்கலை – லிந்துல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிளகுசேனை தோட்டத்தில் (Fairfield estate) நேற்றிரவு தீ பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சேதவிபரம்
மிளகுசேனை தோட்டத்தின் முதலாம் இலக்க நெடுங்குடியிருப்பின் 4 வீடுகளின் கூரைகள் முற்றாகத் தீயினால் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்தில் மக்களின் உடைமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.