யாழில். சவுக்கு வெட்டிய குற்றத்தில் மூவர் கைது
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/07/Screenshot-2024-07-05-103732.jpg)
யாழ்ப்பாணத்தில் சவுக்கு மரங்கள் வெட்டிய குற்றச்சாட்டில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணற்காட்டு பகுதியில் சவுக்கு மரங்கள் பெருந்தொகையாக வெட்டப்படுவதாக வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் மூவரை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 25ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெட்டப்பட்ட சவுக்கு மரங்களை மீட்டுள்ளதுடன் ம் துவிச்சக்கர வண்டிகளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் பருத்திருத்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.