;
Athirady Tamil News

சத்தீஸ்கர்: கிணற்றில் நச்சு வாயு தாக்கி 5 பேர் பலி!

0

சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் கிணற்றுக்குள் நச்சு வாயுவை சுவாசித்ததில் ஐந்து பேர் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பிர்ரா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிகிர்டா கிராமத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடைபெற்றது. உயிரிழந்தவர்கள் ராம்சந்திர ஜெய்ஸ்வால், ரமேஷ் படேல், ராஜேந்திர படேல், ஜிதேந்திரா படேல் மற்றும் திகேஷ்வர் சந்திரா என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை ஆய்வாளர் சஞ்சீவ் சுக்லா தெரிவித்தார்.

முதற்கட்ட தகவலின்படி, ஜெய்ஸ்வால் கிணற்றில் விழுந்த மரக்கட்டையை எடுக்க கிணற்றுக்குள் சென்றுள்ளார். அவர் மயக்கமடைந்தபோது, ​​​​அவரது குடும்ப உறுப்பினர் உதவிக்காக கூச்சலிட்டபோது, படேல் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் கிணற்றுக்குள் சென்றுள்ளனர்.

பின்னர் நால்வரும் வெளியே வராத நிலையில், சந்திரா கிணற்றுக்குள் சென்றார். ஆனால் அவரும் மயக்கமடைந்தார், அதைத்தொடர்ந்து அங்குள்ளவர்கள் காவல்துறையில் சம்பவம் குறித்துத் தெரிவித்தனர்.

கிணற்றிலிருந்து உடல்களை மீட்பதற்காக மாநில பேரிடர் மீட்புப் படைகளின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சுக்லா கூறினார்.

கிணற்றுக்குள் நச்சு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் இறந்ததாகத் தெரிகிறது, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.