;
Athirady Tamil News

சிறிலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்குவது குறித்து மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

0

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் வேட்பாளராக களமிறங்க போவதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) உள்ள விகாரையொன்றில் நடைபெற்ற விசேட வழிபாடுகளில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

தீர்மானம்
தொடர்ந்தும் அவர் கூறுகையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை, இந்த விடயம் தொடர்பான பேச்சுக்களை முன்னெடுக்க இன்னும் காலம் உள்ளது.

கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடனான சந்திப்பை தொடர்ந்து, அதிபர் வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

கட்சியின் அதிபர் வேட்பாளர்
எமது கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், நாம் அவற்றை பொருட்படுத்துவதில்லை.

அத்துடன், தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதிபர் தேர்தலில் களமிறங்குவதாக தெரிவித்துள்ளார்.

அவருக்கு அதற்கான ஆற்றல் உள்ளது. அதனாலேயே அவர் தேர்தலில் களமிறங்குகிறார். எனினும், நான் தேர்தலில் களமிறங்க மாட்டேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.