;
Athirady Tamil News

அதிபரின் பதவிகாலம் தொடர்பான மனு : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

0

அதிபரின் பதவி காலம் தொடர்பாக தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் (08) ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, குறித்த மனுவை விசாரணை செய்வதற்கு ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமை, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய (Jayantha Jayasuriya )நியமித்துள்ளார்.

இதன் அடிப்படையில், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட (Vijith Malalkoda), முர்து பெர்ணாண்டோ (Murtu Fernando), பிரித்தீ பத்ம சூரசேன (Prithi Padma Surasena) மற்றும் துரைராஜா (Durairaja) ஆகியோர் இந்த மனுவை விசாரணை செய்யவுள்ளனர்.

வழக்கு தாக்கல்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று (04) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .

குறித்த மனு தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த அதிபர் தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் அதிபர் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் அந்த மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் இதன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.