;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்: தம்மிக்க வெளிப்படை

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழில் வல்லுநர்களுக்கான நிலையத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இறுதி தீர்மானம்

மேலும், இது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்தில் தான் தற்போது செயற்பட்டு வருவதாகவும் தம்மிக்க பெரேரா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.