;
Athirady Tamil News

மரக்கட்டையை எடுக்க கிணற்றில் இறங்கிய நபர்..காப்பாற்ற சென்ற 4 பேருக்கு நேர்ந்த துயரம்

0

இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் கிணற்றில் இறங்கிய 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள கிகிர்டா கிராமத்தில் ராம்சந்திர ஜெய்ஸ்வால் என்ற நபர், கிணற்றுக்குள் விழுந்த மரக்கட்டையை எடுக்க இறங்கியுள்ளார்.

ஆனால் அவர் மயக்கமடைவதாக உணர்ந்ததால் உதவிகோரி கூச்சலிட்டார். இதனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் ரமேஷ் படேல், ராஜேந்திர படேல் மற்றும் ஜிதேந்திரா படேல் ஆகியோர் உள்ளே இறங்கினர்.

அவர்களும் திரும்பாததால் திகேஷ்வர் சந்திரா என்பவரும் கிணற்றுக்குள் இறங்க அனைவரும் மயக்கமடைந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த உள்ளூர்வாசிகள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக பேரிடர் மீட்புப் படைகளின் குழு ஒன்று மயக்கமடைந்தவர்களை மீட்க கிணற்றுக்குள் இறங்கியது. இதனையடுத்து 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

நச்சு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் இறந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.