;
Athirady Tamil News

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பளை மக்கள் ஆர்ப்பாட்டம்

0

கிளிநொச்சி (Kilinochchi) – அல்லிப்பளை பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பிரதேசத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த குப்பைகள் சில நாட்களுக்கு முன்னர் தீயிடப்பட்டதனால் அப்பிரதேச மக்கள் புகை மற்றும் துர்நாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

மகஜர் கையளிப்பு
இதனைக் கண்டித்து, இன்று (6) காலை 10 மணியளவில் பளை பேருந்து நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாகச் சென்ற மக்கள் பளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கவனம் செலுத்த வேண்டும் என மகஜரும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.