;
Athirady Tamil News

ரிஷி சுனக்கின் கடைசி உரை: ரூ.42,000 ஆடையுடன் கவனம் ஈர்த்த அக்ஷதா மூர்த்தி

0

பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தியின் ரூ.42,000 மதிப்பிலான ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கவனத்தை ஈர்த்த அக்ஷதா மூர்த்தி
பிரித்தானிய தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம்  வெளியாகிய நிலையில், லேபர் கட்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது.

இந்நிலையில் டவுனிங் தெருவின் நம்பர் 10 க்கு வெளியே இறுதியாக செய்தியாளர்களை ரிஷி சுனக் சந்தித்தார்.

அப்போது ரிஷி சுனக்கின் பின்னால் நின்று கொண்டிருந்த அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி அவரின் ரூ.42,000(395 pound ) மதிப்பிலான ஆடையால் அனைவராலும் ஈர்க்கப்பட்டார்.

வெளியான விமர்சனங்கள்
அக்ஷதா மூர்த்தியின் இந்த லீனா(Lina Dress) ஆடை வடிவமைப்பாளர் ஓமி நா நா-வினால்(Omi Na Na) வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தேசிய கொடியை பிரதிபலிக்கும் விதமாக சிவப்பு வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இந்த செவ்ரான் கவுன்(chevron gown) வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அக்ஷதா மூர்த்தியின் ஆடை பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

X சமூகவலைதள பயனர் ஒருவர் இந்த ஆடையை செஃப் முத்தம் என்று குறிப்பிட்டார்.

மற்றொருவர், மோசமான ஆடை மூலம் அக்ஷதா மூர்த்தி தனது கணவர் ரிஷி சுனக்கின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.