;
Athirady Tamil News

பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் வழக்கு: 5 பேரை தூக்கிய பொலிஸார் !

0

வெஸ்டர் நகர மரண வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 பேர் கைது
லெஸ்டர்(Leicester) நகரில் உள்ள Thurncourt பகுதியில் ரேடியன்ட் சாலை (Radiant Road) என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை காலை கண்டறியப்பட்ட பெண்ணின் மரண வழக்கு தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கார்ல் சான்டர்ஸ் (48 வயது, லெஸ்டர்) சட்டப்பூர்வமான இறுதி சடங்கை தடுப்பது, கொள்ளை மற்றும் மோசடி ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

ரிச்சர்ட் சாப்மன் (39) மற்றும் கிறிஸ்டோபர் சாப்மன் (35) இருவரும் கொள்ளை குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்றனர்.

இந்த மூவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், சனிக்கிழமை லெஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

39 மற்றும் 48 வயதுடைய மற்ற இரண்டு பேர், பொலிஸ் விசாரணை தொடரும் நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை (Autopsy) முடிக்கப்பட்டுள்ளது, ஆனால் மேலும் சோதனைகள் தேவை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.