;
Athirady Tamil News

வடக்கை வந்தடைந்தது சீனாவின் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் – அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று அவதானிப்பு

0

வடக்குக்கு வந்து சேர்ந்தது சீனாவின் வீடுகள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியின் பயனாக சீன அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 500 வீடுகள் இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளன.
அவற்றில் ஒரு தொகுதி வீடுகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

வடக்கு,கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு உதவுவதற்காக சீன அரசு வீடுகள், அரசி மற்றும் வலைகளை வழங்குவதற்கு இணங்கியதன் அடிப்படையில் தற்போது அப்பொருட்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.