;
Athirady Tamil News

தேர்தலுக்கான திகதி குறித்து ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு

0

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayakka) குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 16 வரையான காலப்பகுதியினுள் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, ஜனாதிபதித் தேர்தலுக்கான சரியான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தீர்மானிக்கும் என அதன் தலைவர் தெரிவித்தார்.

மனு தாக்கல்
அவர் மேலும், “இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு 2024ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியலில் கையொப்பமிடும் பணிகள் இன்னும் சில தினங்களில் மேற்கொள்ளப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு முன்பாக நாளை (08) பரிசீலிக்கப்படவுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், தேர்தல் திகதியை அறிவிக்க முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.