;
Athirady Tamil News

21 வயது இளைஞரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு! 4 பேர் பலி..உயிரை மாய்த்துக்கொண்ட தாக்குதல்தாரி

0

அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
கென்டக்கியின் Florence நகரில் 21 வயது இளைஞர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது.

அப்போது நபர் ஒருவர் திடீரென விருந்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் 7 பேர் பாதிக்கப்பட்டனர்.

உயிரை மாய்த்துக்கொண்ட தாக்குதல்தாரி
அவர்களில் 4 பேர் உயிரிழந்த நிலையில், தாக்குதல்தாரி தப்பியோடியுள்ளார். பொலிஸார் அவரை துரத்தியதையடுத்து குறித்த நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சேஸ் கார்வே என தெரிய வந்துள்ளது. அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்றும், அவர் விருந்தினர்களை அறிந்திருந்தார் என்றும் தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.