;
Athirady Tamil News

திருடர்களின் சதி முறியடிக்கப்படும்! சஜித் சூளுரை

0

எமக்கு திருடர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை எனவும் திருடர்களின் சதிகள் முறியடிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் (Gampaha) நேற்று (07.07.2024) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பில் உள்ள ஓட்டைகளை ஆராய்வதைத் தற்போதைய ஜனாதிபதியின் சீடர்கள் கடமையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.

மக்களின் சக்தி
தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை என்பது கிடையாது. அவர் திருடர்களைப் பாதுகாக்கும் பணிகளையே முன்னெடுத்துள்ளார்.

சிலருக்கு அதிகாரம் இல்லாமல் உறக்கம் வருவதில்லை. அவ்வாறானவர்கள் பல சதிகளை முன்னெடுத்து ஆட்சியைத் தக்க வைக்க முயல்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு அவ்வாறான எந்தத் தேவையும் இல்லை. எமக்குத் திருடர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை. மக்களின் சக்தியே எமது பலம். திருடர்களின் சதிகள் முறியடிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.