;
Athirady Tamil News

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட பாடகி கே. சுஜிவா உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்!

0

அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாடகி கே. சுஜீவாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் குணமடைந்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதுருகிரிய பகுதியில் உள்ள புதிய பச்சை குத்தும் நிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

பாடகி கே. சுஜீவா தற்போது வைத்தியசாலை வார்டில் தீவிர வைத்திய கண்காணிப்பில் இருப்பதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கிளப் வசந்தவின் மனைவி தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற வேனின் உரிமையாளர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், குறித்த வேன் பல உரிமையாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான தகவல்களைத் தேடி வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.